2012ல-2013 ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான மானியக் கோரிக்கையின் போது கடந்த 1.11.2012 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
அஸ்லம் பாஷா: சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கந்து வட்டி, லாட்டரி சீட்டு சூதாட்டம் போன்றவற்றை ஒழிப்பதற்கு கடுமையான சட்டங்களை நீங்கள் கொண்டுவந்து அமல்படுத்தினீர்கள். அதைபோன்று இன்றைக்குத் தமிழகத்திலே மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டுமென்று அனைத்துத் தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கின்றது. நிச்சயமாக நீங்கள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதன் வருவாயை ஈடு கட்டும் வகையில் இயற்கை வளமான கிரானைட், தமிழகத்திலே உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கிடைக்கிறது. அதன்மூலமாக நிச்சயமாக நீங்கள் வருவாய் இழப்பை ஈடுசெய்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment