தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, March 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் அச்சுரித்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியிருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

கடந்த மார்ச் 23 தேதி அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு மக்களை பீதிக்குள்ளாக்கியது அடுத்து ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை என்ற பெயரால் நிதாகத் என்ற சட்டத்தின் கீழ் சவூதி அரசு கைது செய்துவருகிறது. இந்த சட்டதினால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.