தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, May 23, 2013

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பி­யா) முகாம்.

இன்ஷா அல்லாஹ்....

லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பி­யா) முகாம்.
இடம் :JMA திருமணம் மண்டபம் கொத்தவால் 
தெருநாள் :25.05.2013 (சனிகிழமை)சுபுஹ­ு தொழுகை முதல்மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அழைக்கிறதுலால்பேட்டை நகர த.மு.மு.க

Wednesday, May 1, 2013

கோவை சிறைவாசி அபுதாகிரை விடுதலைச் செய்ய வேண்டும் - சட்டபேரவையில் ம.ம.க. கோரிக்கை

குரூப்-1 தேர்வுகளில் உச்சபட்ச வயதுவரம்பை 45 ஆக மாற்றிட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும், செங்கல்பட்டு முகாம்களை மூடிவிட்டு அங்குள்ளவர்களை கும்மிடிபூண்டி மற்றும் மண்டபம் போன்ற திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டும்
30.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் நீதி நிருவாகம், சட்டத் துறை, சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிசி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையினர் அனைத்துப் பிரிவினருக்கும் 35 வயது என்று நிர்ணயம் செய்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை பெற்ற அனைத்து கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் - மமக கோரிக்கை


30.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் நீதி நிருவாகம், சட்டத் துறை, சிறைச்சாலைகள், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிசி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மற்றும் சிறுபான்மையினர் அனைத்துப் பிரிவினருக்கும் 35 வயது என்று நிர்ணயம் செய்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயம் செய்துள்ளது.

இந்தத் தேர்வு யுபிஎஸ்சி-ஐப்போல் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவதில்லை ஒரு முறை அறிவிப்பு செய்து தேர்வு நடத்தி, பணி நியமனம் பெறுவதற்கு 3 ஆண்டுகள் ஆகின்றது ஆகவே குறைந்த வாய்ப்புகளே பெறுவதற்கான சூழ்நிலை இருப்பதால், நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகளில் உச்சபட்ச வயதுவரம்பை 45 ஆக மாற்றிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:


29.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் மரக்காணம் கலவரம் தொடர்பாக பேரா எம் எச் ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது ஆற்றிய உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 25 ஆம் தேதி மரக்காணம் பகுதியிலே நடைபெற்றது உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவமாக விளங்குகிறது. குடிசைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன: கூனிமேடிலே உள்ள பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. அரசு பேருந்துகளும் எரிக்கப்பட்டு ஒரு பதற்றமான சூழல் உருவாயியிருப்பது நாம் அனைவரும் அறிந்தது. இதற்கு முக்கிய காரணமாக நாங்கள் கருதுவது, வெறுப்புணர்வை ஊட்டக்கூடிய பேச்சுகள், சாதி மோதல்களாக இருக்கட்டும் அல்லது வகுப்புவாத மோதல்களாக இருக்கட்டும், இவற்றுக்கு அடிப்படையாக விளங்குவது எந்தவிதமான வரம்பும் இல்லாமல் பொறுப்புணர்வும் இல்லாமல் மேடைகளிலே பிற சாதியினரையும், மதத்தைச் சார்ந்தவர்களையும் புண்படுத்தக்கூடிய வகையிலே அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையிலே உரைகள் ஆற்றப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலே, இதுபோன்ற வெறுப்புணர்வைத் தூண்டக்கூடிய பேச்சுகளை யார் பேசினாலும் அவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நிச்சயமாக இந்த அரசு பாரபட்சம் இல்லாமல் கடந்த காலங்களிலே கையாண்டிருக்கின்றது. எதிர்காலத்திலும் அப்படி கையாளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டபேரவையில் மமக வலியுறுத்தல்


25.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
வேலூர் கோட்டையிலே அகழ்வாராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப் படக்கூடிய கோட்டையிலே சர்ச் இருக்கிறது. அங்கே வழிபாடு நடக்கிறது. அங்கே ஜகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கேயும் வழிபாடு நடக்கிறது. அங்கே இருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிகுந்த பள்ளிவாசலிலும் வழிபாடு நடத்தவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொப்பரைக்கான கொள்முதல் விலையை 70 ரூபாயாக உயர்த்த வேண்டும் :சட்டபேரவையில் மமக கோரிக்கை


30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான 8383 ஹெக்டேரில் மட்டும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. 836 இலட்சம் தேங்காய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும், இதுவரை கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அங்கே தொடங்கப் படவில்லை இருப்பினும் கொப்பரைவரத்தின் அடிப்படையில், தேவை ஏற்படும் பட்சத்தில் முறையான கருத்துரு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெறப்பட்டு, TANFED நிறுவனம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடங்குது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தவறான செய்திக்கு தினமலர் வருத்தம்!