தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Wednesday, May 1, 2013

கொப்பரைக்கான கொள்முதல் விலையை 70 ரூபாயாக உயர்த்த வேண்டும் :சட்டபேரவையில் மமக கோரிக்கை


30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?
மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான 8383 ஹெக்டேரில் மட்டும் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. 836 இலட்சம் தேங்காய்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதாலும், இதுவரை கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் அங்கே தொடங்கப் படவில்லை இருப்பினும் கொப்பரைவரத்தின் அடிப்படையில், தேவை ஏற்படும் பட்சத்தில் முறையான கருத்துரு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் பெறப்பட்டு, TANFED நிறுவனம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடங்குது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: 1960-களிலே மத்திய, மாநில அரசுகள் எண்ணெய்வித்துகளை ஊக்குவிப்பதற்காக முதன்முறையாக இராமநாதபுரம் மாவட்டத்திலே, தென்னை விவசாயம் தொடங்கப்பட்டது. கீழக்கரை, காஞ்சிரங்குடி, ரெகுநாதபுரம், தாமரைக்குளம், பெரியப்பட்டணம் உள்பட எனக்கு தெரிந்த என்னுடைய ஆய்விலே 10000 ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெற்றுவருகிறது. 2 இலட்சம் மக்கள் அதை நம்பி வாழ்கிறார்கள். எனவே அங்கே கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் மிகவும் அவசியமாக இருக்கிறது. அதை இந்த அரசு பரிசீ-க்கும் என்று சொன்னதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் உங்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று, தேங்காயைக் கொள்முதல் செய்வதற்கும், கொப்பரைக்கான கொள்முதல் விலையை 70 ரூபாயாக உயர்த்துவதற்கும் இந்த அரசு முன்வருமா என்று தங்கள் மூலமாக வினவ விரும்புகின்றேன்.

மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: ஆண்டுதோறும் மத்திய அரசு வேளாண் செலவு விலை நிர்ணய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கொப்பரைக் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து வருகிறது. நடப்பு 2012-2013 நிதியாண்டில், அரவை கொப்பரை விலை கிலோ 52 ரூபாய் 50 பைசா எனவும், தண்டு கொப்பரை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் எனவும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசு தேசிய அளவில் கொப்பரைக் கொள்முதலுக்கு தேசிய வேளாண் விற்பனை இணையத்தினை மையக் கொள்முதல் முகவராக நியமித்துள்ளது. NAFED நிறுவனம் தமிழ்நாட்டில் அரவைக் கொப்பரைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக முகவராக இருந்து கொள்முதல் செய்து வருகிறது. ஏனென்றால் கொப்பரைக்கான விலையை நிர்ணயம் செய்வது என்பது மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. எனவே, தற்போது கொப்பரை கிலோ ஒன்றுக்கு 52 ரூபாய் 50 காசுகள் எனவும் தண்டுக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய் எனவும் நாங்கள் கொள்முதல் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment