தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Sunday, September 30, 2012

கோவை மாநகர் மமக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்


கோவை மாநகர் மமக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் 29-09-2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை கரும்புக்கடை ஜீவன்ஸ் திடலில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அவர்களிடம் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருப்பூரில் 3 ஆம் தேதி நடைபெறும் பந்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு கொடுப்பது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழ்நாட்டுக்கே தர வேண்டும் என்றும், எதிர்வரும் 3 ஆம் தேதி கோவையில் மனிதநேய மக்கள் கட்சியின் 5 ஆம் ஆண்டு துவக்க விழா மாநாட்டை பிரமாண்டமான முறையில் நடத்துவது என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் தமுமுக மாநில துணை பொதுசெயலாளர் இ. உம்மர், மாநில செயலாளர் கோவை செய்யது மற்றும் மாநில அமைப்பு செயலாளர் செய்யது அஹமது பாரூக் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள் . செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ஏ. அப்துல் பஷீர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாநகர மாவட்ட தலைவர் இ. அஹமது கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் ஏ. சாதிக் அலி எம்.சி., மாவட்ட பொருளாளர் என். அஜ்மீர்கான், அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மாவட்ட துணை செயலாளர் எம். அமானுல்லா நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் மாநகர மாவட்ட, பகுதி, கிளை கழக முன்னாள் இன்னாள் நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.