மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நவம்பர் 23, 24, 25 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் துண்டுப் பிரசுர விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட உள்ளது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து முழு விபரங்கள் அடங்கிய 1 கோடி துண்டுப் பிரசுரங்கள் வினியோகத்தை மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தொடங்கி வைக்கிறார்கள். இவைதவிர, சுவரொட்டிகள், வீதி முழக்கங்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாகன பரப்புரை என பன்முக அம்சங்களோடு இப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சிறப்பு அழைப்பாளர்களாக வடசென்னையில் வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு. த.வெள்ளையன் அவர்களும், மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். மற்ற நகரங்களில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஒத்தக் கருத்துடைய கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
(எம். தமிமுன் அன்சாரி)
No comments:
Post a Comment