தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, November 26, 2012

இரண்டாவது நாளாக எழுச்சி

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து மமக நேற்று தொடங்கிய துண்டு பிரசுர விழிப்புணர்வு பரப்புரை இன்று இரண்டாவது நாளாக மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. நேற்று மாவட்ட தலைநகரங்கள், பெரு நகரங்களில் தொடங்கிய பரப்புரை இன்று சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பரவியது.
மமக வின் டி ஷர்ட் கலை அணிந்து கொண்டு கொடிகளை கையில் ஏந்தி வீதி வீதியாக துண்டு பிரசுரங்களை மமக வினர் வழங்கி வருகிறார்கள்.
கடை வீதிகளிலும், பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்களை வாங்கி படிக்கும் மக்கள் மமக வின் இப்பரப்புரையை வரவேற்று பாராட்டுகின்றனர்.

நாளையும் இப்பரப்புரை தொடர்கிறது. துண்டு பிரசுரங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் பல மாவட்டங்களில் மர பதிப்பு செய்து வெளியிடப்பட உள்ளது.இது தவிர தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment