தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Friday, November 2, 2012

யான்பு கிளையின் சார்பில் கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி


இறைவனுடைய மாபெரும் கிருபையினால் கடந்த 27-10-2012 சனிக்கிழமையன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி யான்பு கிளையின் சார்பில் கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்க்கு சவூதிஅரேபியா ஜித்தா மேற்குமண்டலச் செயலாளர் காரைக்கால் அப்துல் மஜீத் அவர்களும் யான்பு தொழிலதிபர் சகோ.அக்பா; அலி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பிறகு 8 மணி அளவில், தமுமுக யான்பு கிளையின் துணைத்தலைவர் சகோ.இப்ராஹீம் B.S.C அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஹாபிஸ் அதிரை சலாஹுதீன் அவர்கள் கிராஅத் ஓத நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகின. யான்பு கிளையின் மமக செயலாளர் திட்டுவிளை சகோ.முஹம்மது ராபீ DAE அவர்கள் கிளை செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். அண்ணல்நபி(ஸல்) அவர்களை இழிவாக சித்தாக்த்து திரைப்படம் எடுத்த யூத அமெரிக்கர்களுக்கு எதிராக கிளையின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்தார்.


யான்பு கிளையின் ஆலாசகர் கூத்தாநல்லூர் முஹம்மது ஜஃபருல்லாஹ் M.Tech அவர்கள், 'இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் சிறப்பு” என்ற தலைப்பில் மார்க்க அடிப்படையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் சகோ.அக்பர் அலி அவர்கள் ‘கல்வியில் ஆர்வம் காட்டுவோம்’ என்ற தலைப்பில் உணர்ச்சிபொங்க உரை நிகழ்த்தினார்.

பின்னர் ஜித்தா மேற்குமண்டலச் செயலாளர் காரைக்கால் அப்துல் மஜீத் அவர்கள் தமுமுக-மமக செயல்பாடுகள் குறித்தும் சமுதாய கல்வி விழிப்புணர்ச்சிக்கு தமுமுக ஆற்றிவரும் பணிகள் குறித்தும் சிற்றுரையாற்றினார்கள். கிளையின் கௌரவ ஆலோசகர் தஞ்சை முஹம்மது ஷாஜஹான் B.E அவர்கள் ‘இடஒதுக்கீடும் விழிப்புணர்வும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். யான்பு மாநகரில் மனிதநேய மக்கள் கட்சியினை மேலும் வலுப்படுத்த தேவையான நிர்வாகிகளை நியமிக்க மண்டலத் தலைவர் வழங்கிய ஆலோசனையின்படி, யான்பு கிளையின் அனைத்து செயல்பாடுகளில் தன்னை இணைத்து அருமையாக செயல்பட்டுவரும் காயல்பட்டணத்தை சேர்ந்த சகோ.சாகுல்ஹமீது அவர்கள் பெயர் முன்மொழியப்பட்டு உறுப்பினர்கள் அனைவர்முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி கிளை துணைச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்லாஹுஅக்பா;.

பின்னர் கல்வி விழிப்புணர்வு குறித்தும் தமுமுக-மமக செயல்பாடுகள் குறித்தும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கேள்விகள் கேட்டு தங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டனர். அதன்பிறகு நன்றியுரையை கிளையின் கௌரவ ஆலோசகர் பாளை அஹமது அனீஸ் B.Sc வழங்க துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பிறகு அனைவர்க்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு யான்பு பலத், ராயல்கமிஷன் மற்றும் செம்மோக் பகுதிகளில் இருந்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாகவும் அருமையாகவும் நடந்திட அருள்புரிந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்..
அல்ஹம்துலில்லாஹ்..

No comments:

Post a Comment