பஹ்ரைனில் கடந்த வாரம் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் தமிழகத்தில் தோப்புத்துறையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடலை மீட்டு தருமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அங்குள்ள தமுமுக வினரும், சமுதாய ஆர்வலர்களும் அவரது உடலை பெற்று தமிழகத்திற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டனர்.
இன்று காலை அவரது உடல் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து இறங்கியது. உடலை திருச்சி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லப்பட்டு அய்யம்பேட்டையில் உள்ள அவரது மனைவி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. அவரது உறவினர்கள் தமுமுக வினருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment