முஸ்லிம் ஷரீயத் சட்டத்தில் அத்து மீறி செயல்படும் சமூக நல வாரியத்தை கண்டித்து... இந்திய அரசியல் அமைப்பும் முஸ்லிம்களின் உரிமைகளும் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று 03-11-2012 அன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் தமுமுகவின் தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, அவர்களும், மாநில செயலாளர் கோவை செய்யது அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment