தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Thursday, November 29, 2012

காவிரி நதிநீதி விவகாரம்: அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைக் கூட்டவேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையிலான காவிரி நீர் தீர்ப்பாணையமும் மற்றும் உச்சநீதிமன்றமும் கர்நாடக மாநில அரசு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டுமென உத்தரவுகள் பிறப்பித்தும் அதை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தாத சூழ்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடக முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுத்துள்ள கர்நாடக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

(ஜே.எஸ்.ரிபாயீ)

No comments:

Post a Comment