சென்னை வில்லிவாக்கம் தமுமுக பகுதி கிளை சார்பாக தமுமுகவின் ஒற்றுமையை நோக்கி என்ற நிகழ்ச்சி இன்று (04-11-2012) நடைபெற்றது. இக்கூட்டத்தில் PowerPoint மூலமாக தமுமுகவின் கடந்த கால வரலாறு பற்றி பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் விளக்கினார்கள். நூற்றுக்கும் அதிகமான ஜமாத் நிர்வாகிகள், இமாம்கள், ஆலிம்கள் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை தொடுத்தனர்.
பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்களும் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்தனர். இறுதியாக தமுமுகவின் நோக்கம் ஜமாத்தார்களிடம் தமுமுகவிற்கு இருக்கும் நெருக்கம் ஆகியவற்றை விளக்கி தலைவர் ஜே.எஸ்.ரிபாயி உரை நிகழ்த்தினார்.
மாவட்ட நிர்வாகிகளும், பகுதி கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் தீன் அவர்கள் நன்றி கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு தமுமுகவின் பணிகளில் ஜமாத்தார்கள் பங்கேற்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment