கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இஸ்ரே-ன் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள் (இன்ஷாஅல்லாஹ்).
தமிழகத்தின் பிற இடங்களில் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்து கண்டன சுவரொட்டி ஒட்டுமாறும் மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(கண்டன சுவரொட்டி மாதிரி கீழே உள்ளது)
- தமுமுக தலைமையகம்
No comments:
Post a Comment