18-11-2012 அன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு சங்கராபுரத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவிற்கு தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி, மாநில தொண்டரணி செயலாளர் அப்துல் காதர், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் உஸ்தாத் தீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவராக கள்ளக்குறிச்சி முஜிபுர் ரஹ்மான், தமுமுக மாவட்ட செயளாளர் திருக்கோயிலூர் பாசில் முஹம்மது, மமக மாவட்ட செயளாளர் உளுந்தூர்பேட்டை முஹம்மது அலி, மாவட்ட பொருளாளராக சங்கராபுரம் அயூப் கான், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment