தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, October 29, 2012

குவைத் தமுமுக -மமக வின் கைதான் கிளைசார்பாக நடந்த தியாக திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி


குவைத் தமுமுக -ம ம க கைதான் கிளை சார்பாக இன்று 26 .,10 .2012 வெள்ளி கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பிறகு முர்காபில் உள்ள கன்னியாகுமரி உணவகத்தில் வைத்து ஈத்மிலன் -பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் கிளை தலைவர் (பரங்கி பேட்டை) ஹாஜா மக்தும் அவர்கள் தலைமையில் நடந்தது,
மிஸரப் கிளை செயற்குழு உறுப்பினர் (திருமுல்லைவாசல்) மொவ்லவி பைசுல் ரகுமான் அவர்கள் திருமறை வசனம் ஓதி கூட்டத்தை தொடங்கி வைத்தார் .
இந்த நிகழ்ச்சியை அழகான முறையில் கல்வி குழு செயலாளர் (முத்துகாப்பட்டி) ஹாஜா மைதின் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

குவைத் மண்டல அமைப்பாளர் (பாண்டிசேரி) அலாவுதீன் அவர்கள் ,மகபூலா கிளை தலைவர் (இளையான்குடி) சீனி முகமது மற்றும் மிஸரப் கிளை செயலாளர் (பாக்கம் கோட்டூர்) ஷேக் பரீத், ரிக்கா கிளை தலைவர் (வலங்கைமான்) அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கைதான் கிளை செயலாளர் (திருமங்கலம்) இலாஹி ப க் ஷ் அவர்கள் வரேவேற்று பேசினார்
நம் சகோதரர்களுக்கிடையே அவசியம் தேவை ஒற்றுமை என்ற தலைப்பில் மிஸரப் கிளை செயலாளர் பாக்கம் கோட்டூர் ஷேக் பரீத் அவர்கள் பேசி மக்களிடையே வரவேற்ப்பை பெற்றார்.
நிகழ்ச்சியில் தமுமுகவின் சமீப கால சாதனைகள் என்ற தலைப்பில் மண்டல செயலாளர் (பெருங்களூர்) முஜிபுர் ரகுமான் அவர்கள் தனது கணீர் குரலில் மக்களை சிந்திக்கும் விதமாக பேசினார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் மாநில தமுமுக -ம ம க தலைவர் J.S.ரிபாய் அவர்கள் ஈத் மிலன் -தியாக திருநாள் நல் வாழ்த்துக்கள் கூறி இப்ராகிம் நபி ( அலைவஸலாம்)
அவர்களின் தியாக வரலாறை நினைவு கூர்ந்து இந்த தியாக திருநாளில் தமிழகத்தின் தமுமுக வின் -மமக வின் வீரியமிக்க 17 ஆண்டு கால வீரம் செறிந்த தியாக வரலாற்றையும் , செயல் பாடுகள் குறித்தும் உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கூறி தொண்டர்களுக்கு புது இரத்தம் பாய்சினார் .
நிகழ்வின் முடிவில் கிளை செயற் குழு உறுப்பினர் (நெல்லை ) தாழையூத்து அனிபா அவர்கள் அவர்களின் நன்றி உரையுடன் து ஆ ஓதி கூட்டம் இனிதே முடிவு பெற்றது.
கூட்டதிற்கு வந்திருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தி பெருநாள் வாழ்த்துக்கள் கூறி சந்தோசமாக கலைந்து சென்றனர் ,
தமிழக தமுமுக -மமக தலைமை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனில்
அக்கறை கொண்டு தமிழர்களுக்கு என தனி அமைசகம் மற்றும் தனி நல வாரியம் அமைத்து தர கோரி தமிழக அரசை வலி யுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும் எனவும்
தனி அமைசகம் மற்றும் தனி நல வாரியம் அமையும் வரை குறைந்த பட்சம் தமிழ் பேசும் பிரதி நிதி ஒருவரை வெளி நாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகத்திலும் தமிழக அரசு நியமிக்க வலியு றுத்த வேண்டும் என மக்கள் தொடர்பு &மீடியா செயலாளர் பீர் மரைக்காயர் தீர்மானம் கொண்டு வர அனைவரின் ஒரு மித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிறுகுடி ஜமாஅத் தலைவர் அக்பர் மற்றும் சுக்கூர் உள்ளிட்ட பெரும்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்

செய்தி வெளியிடு ;

நா .பீர் மரைக்காயர்,தமுமுக -ம ம க
மக்கள் தொடர்பு &மீடியா செயலாளர்
குவைத் மண்டலம்

No comments:

Post a Comment