தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்கும் உத்தரவு திரும்பப்பெற வேண்டும் என கர்நாடகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சை மனிதநேய மக்கள் கட்சி கடுமையாகக் கண்டித்ததுடன், 16.10.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும், 22.10.2012 அன்று நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திலும், எஸ்.எம்.கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா இன்று பதவி விலகியுள்ளார்.
No comments:
Post a Comment