மனிதநேய மக்கள் கட்சி இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை.
தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சனையில் பிரதமர் சமீபத்தில் கூட்டிய கூட்டத்தின் முடிவில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவராக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களது எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்யவேண்டும். அதேநேரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வீரியத்துடன் முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
(எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத்)
No comments:
Post a Comment