தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, October 29, 2012

பக்ரீத் பண்டிகையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
வரும் 27.10.2012 சனிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இப்புனித நாளில் தடையில்லா மின்சாரம் வழங்க மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் தமிழக மின்சாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிபிட்டுள்ளதாவது:

ரம்ஜான் மற்றும் ஹஜ் பண்டிகை நாட்களில் முஸ்லிம்கள் அனைவரும் காலையில் பள்ளிவாசல்களில் கூடி தொழுகை நிறைவேற்றுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று மின்தடை காரணமாக முஸ்லிம்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, இவ்வருடம் இதுபோன்ற மின்தடை ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்க 27.10.2012 அன்று குறிப்பாக அதிகாலை முதல் பிற்பகல் வரை தடையின்றி மின்சாரம் வழங்க கோருகின்றோம்.

என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)

No comments:

Post a Comment