இராமநாதபுரத்தி-ருந்து திருச்சிக்கு புதிய பேருந்து போக்குவரத்தை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். சுந்தரராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேருந்து ஆர்.எஸ். மங்கலம், சி.கே. மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இப்பேருந்து சேவை இராமநாதபுரத்திலிருந்து தினமும் காலை 6:45, 10:20 மற்றும் 6:15, திருச்சியிலிருந்து அதிகாலை 5:25, மதியம் 12:30 மற்றும் மாலை 4 மணி என 3 முறை இயக்கப்படும்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment