13.10.2012 சனிக்கிழமை அன்று விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைத்த மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரம் RR மஹாலில் நடைபெற்றது. த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது , ம.ம.க. இணை பொது செயலாளர் s.s.ஹாரூண் ரஷித் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் மாவட்டம், ஒன்றியம், நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment