காவிரி நதி நீரில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்குரிய பங்கினை தர மறுக்கும் கன்னட அரசியல்வாதிகளையும், மொழி வெறியர்களையும் கண்டித்து மமக வின் சார்பில் நாளை (16-10-2012) திருவாரூரில் தலையில் கருப்பு முண்டாசு கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காலை 10.30 மணியளவில் பழைய ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இதில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் திரளாக பங்கேற்க உள்ளனர்.
திருவாரூர் முழுக்க போராட்ட விளம்பரங்களும், மமக வின் கொடிகளும் பரபரப்பை ஊட்டிக் கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment