மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுவைக்கு தரவேண்டிய காவிரி நதிநீரை வழங்க தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசியல்வாதிகளையும், கன்னட வெறியர்களையும் கண்டித்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீரை தடையின்றி திறந்துவிட கர்நாடக அரசை வ-யுறுத்தியும் திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாளை காலை 10:30 மணியளவில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் "தலையில் கறுப்பு முன்டாசு கட்டி அறவழிப் போராட்டம்" நடைபெற உள்ளது இப்போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தமுமுக மாநில செயலாளர் மீரான் மைதீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அன்புடன்
(பி.எம்.ஆர். சம்சுதீன்)
No comments:
Post a Comment