மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் இரங்கல் செய்தி:
முன்னாள் பிரதமரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஐ.கே.குஜ்ரால் அவர்களின் மறைவிற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
வி.பி.சிங் அவர்களின் அரசியல் எழுச்சியின் மூலமாக அரசிய-ல் அறிமுகமானவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஐ.கே.குஜ்ரால் அவர்கள் முதன்மையானவர்.
வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது அண்டைய நாடுகளுடன் சுமூக உறவை பலப்படுத்துவதில் அக்கறைக் காட்டினார். இவர் பிரதமராக இருந்த காலத்தில் ஊழலுக்கு இடம்கொடுக்காமல், மதச்சார்பற்ற அரசியலை சிறப்பாக வழிநடத்தினார்.
எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் பொதுவாழ்வை நகர்த்தியவரின் உயிர் இன்று முற்றுப்பெற்றுள்ளது. அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவரான இவரது இழப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பாகும்.
அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
(ஜே.எஸ்.ரிபாயீ)
No comments:
Post a Comment