தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, December 1, 2012

சிறைவாசி அபுதாகிர் உயிருக்கு போராட்டம் - நீதிக்கான போராட்டம்


கோவை சிறையில் கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கொண்டு இருக்கும் சிறைவாசி அபுதாகிர் என்பவர் இரு சிறுநிரகமும் பாதிக்கப்பட்டு இதய நோய்க்கும் உள்ளாகி பார்வை குறைபாடும் ஏற்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்... கடந்த 11 மாதங்களாக சிகிச்சைக்காக பரோல் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளதால் நோயின் பாதிப்பு அதிகமாகி அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் சிறுபான்மை அறக்கட்டளை வழக்கு தொடர்ந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 24 -08 -12 அன்று சிறைவாசி அபுதாகிர் 30 -08 -2012 அன்றில் இருந்து பரோலில் விட உள்துறை செயலாளருக்கு உத்தரவு இட்டு இருந்தது. எனினும் அபுதஹிரை சிறையில் வைத்துள்ளது ...
சிறையில் போதிய சிகிச்சை இன்றி சிறைவாசி அபுதாகிர் அவ்திப்பட்டு உயிருக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதால் நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பாக போராட சிறுமான்மை அறக்கட்டளை, த மு மு க , பி எப் ஐ, ஜமாஅதே இஸ்லாமிக் ஹிந்த் , ம ம க, எஸ் டி பி ஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், வெல்பேர் பார்டி ஆப் இந்திய, இந்தியன் தௌ கித் ஜமாஅத் , இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ( ம) போன்ற அமைப்புகள் அணைத்து முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைத்து இன்ஷா அல்லா 30 -11 -2012 அன்று மாலை 4 .30 மணிக்கு கோவை செஞ்சுலுவை சங்கம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நீதியின் குரல் ஓற்றுமையாக ஒலிக்க அனைவரும் ஆதரவு தருக ....

No comments:

Post a Comment