தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Friday, April 26, 2013

பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்-சட்டப் பேரவையில் மமக கோரிக்கை


முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேசிய நெடுஞ்சாலை 49--ருந்து புதுமடம் செல்லக்கூடிய சாலை நீண்டகாலமாக பழுதடைந்துள்ளது அதை சீர் செய்வதற்கான திட்ட ஒதுக்கீடுகளெல்லாம் செய்த பிறகும்கூட, அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றது. இதுகுறித்து அதிகாரிகளிடம் வினவும்போது, ஒரு Package System த்தில் இந்தச் சாலைகளை போடுகிறோம். அதனால் தாமதமாகும் என்று சொல்கிறார்கள். எனவே, விரைவிலே இந்தச் சாலையைப் போடுவதற்கு இந்த அரசு முன்வருமா என்று வினவ விரும்புகிறேன்.


மாண்புமிகு திரு. எடப்பாடி. கே. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அங்கே சாலைகளை சீரமைக்க வேண்டுமென்று இங்கே கருத்துகளை தெரிவித்திருகின்றார்கள், இந்த அரசு தேசிய நெடுஞ்சாலையில் மேம்படுத்தப்படுகின்ற பல்வேறு சாலைகள், தேவையான நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நேரத்தில்கூட, மாண்புமிகு முதல்வர் அவர்கள் 11 தேசிய நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி இருப்பினும் மாண்புமிகு முதல்வருடைய அரசு எங்கெங்கெல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கின்றதோ அங்கெல்லாம் நிதியொதுக்கீடு செய்து, அதை சீர் செய்ய வேண்டுமென்று 11 சாலைகளுக்கு ஆணையிட்டிருக்கின்றார்கள். அதேபோல் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரைந்து செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment