தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, April 22, 2013

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய சட்டமன்றத்தில் குரல் ஒலித்தது



தமிழக சட்டமன்றதில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய குரல் எழுப்பிய காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ந.முருகுமாரன் அவர்களுக்கு நன்றி !நன்றி !!நன்றி !!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமையவேண்டும் என்று லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது
லால்பேட்டை த.மு.மு.க வும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது

15.12.2012 மாலை லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டத்தில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக சில தடைகள் உள்ளதால் அதை தகர்தெரிய உணர்வுமிகு போராட்டம் நடத்தப்படும்.என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது அதனை தொடர்ந்து அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முறையாக கோரிக்கை மனு அனப்பபட்டது.
பள்ளி அமைவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்ப்பட்டதால் 20.03.2013 அன்று நடந்த நகர த.மு.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் முதல் கட்டமாக சுவரொட்டிகள் ஓட்டுவது என்று முடிவெடுக்க பட்டது. அதனை தொடர்ந்து 21.03.2013 அன்று லால்பேட்டை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

ஜூலை 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி - தமுமுக அறிவிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில்,
தமிழகத்தில் முஸலிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,
திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூலை 6 (சனிக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அன்புடன்
(ப. அப்துல் சமது)
பொதுச் செயலாளர்

முஸ்லிம் மாணவிகளுக்கு சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும்



08.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னையில் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே சிறுபான்மையின சமுதாயத்திற்கு 8 விடுதிகளை அளித்தார்கள், அதில் ஒரு விடுதியை சென்னை இராயப்பேட்டையில் கல்லூரி மாணவியர்கள் 100 பேர் தங்கிப் படிக்கும் வகையில் துவங்குவதற்காக ஆணையிட்டுள்ளார்கள், இந்த ஆண்டு முதல் இந்த விடுதி செயல்படத் தொடங்கும், தற்போது சென்னையில் சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்குவது குறித்து கருத்துரு எதுவும் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை, இருப்பினும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அவர்கள் தங்கி கல்விப் பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

லால்பேட்டை த,மு.மு.க சார்பில் மருத்துவ உதவி....



லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் ஹபீபுல்லா.அவர்கள் .கடந்த சில நாட்களாக சிறுநீரகம் கோலாரால் அவதிப்பட்டு வருகிறார் .
அவரை நகர தலைவர் முஹமது ஹாரிஸ் 
நகர த.மு.மு.க.செயலாளர் நூருல் அமீன் 
நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன்
நகர துணை செயலாளர் ஹபிபுர்ரஹ்மான்
நகர மாணவர் அணி செயலாளர் முஹமது ஷபீக் ஆகியோர்
நேரில் சென்று நலம் விசாரித்து அவரிடம் மருத்துவத்திற்காக
த.மு.மு.க சார்பில் ரூ 25 ஆயிரம் உதவி வழங்கினார்கள்.

M.R. நஜ்முத்தீன் M.ஆசியா பர்வின் திருமணம்



 இன்ஷா அல்லாஹ்... 07.04.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ஜாக்கிர் வருகைதரயிருக்கிரார்கள்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்..A.அன்சர்அலி K.இம்தியாஸ் S. பைசல்  V.அஹமது B.com.,  M.Z.ல்மான் B.sc.,  

Saturday, March 30, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடி மாவட்ட மக்களை மிகவும் அச்சுரித்தி வந்த ஸ்டெர்லைட் ஆலையை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியிருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

கடந்த மார்ச் 23 தேதி அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு மக்களை பீதிக்குள்ளாக்கியது அடுத்து ஒரு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி பாராட்டுகிறது.

சவூதி நிதாகத் சட்டம்: இந்தியர்களின் வேலை இழப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தமுமுக கோரிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் வெளி நாட்டவர்களை கண்டறியும் நோக்கில் ஆயிரக்கானக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சோதனை என்ற பெயரால் நிதாகத் என்ற சட்டத்தின் கீழ் சவூதி அரசு கைது செய்துவருகிறது. இந்த சட்டதினால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.